காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பிரித்தானியா 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையுடன் கடும் வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையால், ஏராளமான மக்கள் கடற்கரைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
மேலும், அதிகரித்த வெப்பம் காரணமாக திறந்த நீர் நிலைகளில் நீராடிய நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவாகவே இந்தச் சாதனை அளவிலான வெப்ப அலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பீரியல் கல்லூரியின் (Imperial College) காலநிலை அறிவியல் பேராசிரியர் ஃபிரடெரிக் ஓட்டோ (Friederike Otto) இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோடையின் உச்சக்கட்டத்தில்கூட இந்த அளவிலான வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை என அவர சுட்டிக்காட்டியிள்ளார்.
வசந்த காலத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் காண்பது முற்றிலும் வியப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பருவநிலை மாற்றம் வெப்ப அலைகளை மேலும் சூடாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாம் வளர்ந்த காலநிலையும், நமது கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














