• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா இத்தாலி
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இத்தாலி, உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள், ஜெர்மனி
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு ‘மூன்றாம் நாட்டில்’ அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அதன் சட்டமியற்றுபவர்களும் முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளனர்.

வலதுசாரி அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தங்கள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளை மிகக் கடுமையானதாக மாற்றும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission) முன்மொழியப்பட்ட இந்த புதிய மசோதாவிற்கு, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முறையான இறுதி ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.

புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களை, தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளில் அமைக்கப்படும் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்ப உறுப்பு நாடுகளுக்கு இச்சட்டம் அனுமதியளிக்கும்.

குடியேறிகளின் தடுப்புக்காவல் காலத்தை நீட்டிக்கவும், சட்டத்திற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய தடை, அபராதங்கள் மற்றும் குற்றவியல் தண்டனைகளை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது.

புலம்பெயர்ந்தோரின் தனிப்பட்ட உடைமைகளைப் பறிமுதல் செய்யவும், சிறார்களைத் தடுத்து வைக்கவும், பயோமெட்ரிக் (Biometric) தரவுகளைச் சேகரிக்கவும் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து அதிரடிச் சோதனைகளை நடத்தவும் அதிகாரிகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி வழங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு சட்டவிரோதக் குடியேறிகளின் வருகையானது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% வரை குறைந்துள்ளது.

இது கடந்த 2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டவர்களில் சுமார் 20 சதவீதத்தினர் மட்டுமே தற்போது நாடு கடத்தப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

யார் நாட்டிற்குள் நுழையலாம், யார் தங்கலாம் மற்றும் யார் வெளியேற வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழுமையான கட்டுப்பாட்டை இந்த புதிய விதிகள் வழங்கும் என ஐரோப்பிய ஆணையர் மேக்னஸ் புரூனர் (Magnus Brunner) தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய குடியேறிகளை அனுப்ப எந்தெந்த வெளிநாடுகள் சம்மதித்துள்ளன என்ற விபரத்தை உறுப்பு நாடுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

இருப்பினும், கூட்டு நாடுகடத்தல் மற்றும் குடிவரவு மையங்களை அமைப்பதற்காக நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, கிரீஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுடன் நடத்தப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் அதே வேளையில், மக்களை நாடு கடத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு இது அரசாங்கங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என ஐரோப்பிய ஆணையம் கூறினாலும், மனித உரிமை அமைப்புகள் இக்கூற்றை முற்றாக நிராகரித்துள்ளன.

 

Related

Tags: European CommissionerEuropean Unionworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த ஆகக்குறைந்த செலவு அதிகரிப்பு!

Next Post

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

Related Posts

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!
உலகம்

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16
அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!
உலகம்

அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

2026-07-16
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!
இலங்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16
Next Post
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.