திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை
தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இதுவரைக்காலம் பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ள காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
மேலும், இது தொடர்பாக கண்டறிவதற்காக, இதுவரை மீள ஒப்படைக்கப்படாத காணிகளை பார்வையிடும் நோக்கில் இன்று கள விஜயம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












