தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த மோதர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வு பிரிவினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 2026.06.02 அன்று மதிய வேளையில் மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, அதற்கான ஒரு மெகசின் (Magazine), 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 4 தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய ஒரு துப்பாக்கி, அதற்கான ஒரு மெகசின் மற்றும் 7.6 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 3 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது.













