எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (3) காலை இந் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் எம்பிலிப்படிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.













