இங்கிலாந்தைச் சேர்ந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ரசிகை ஒருவர், இந்தியன் பிரீமியர் லிக் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக 72 மணி நேரக் குறுகிய பயணமாக 6,800 கி.மீ.க்கும் மேல் தனியாக பயணம் செய்து இந்தியா சென்றடைந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது இந்தியாவில் முன்பின் தெரியாதவர்கள் தன்னிடம் வெளிப்படுத்திய அன்பு மற்றும் உதவியும் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாகக் கூறியுள்ளார்.
அந்த அனுபவம் தொடர்பில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகையான எரிக்கா மோரிஸ் (Erika Morris), தனது பயணத்தை ‘X’ தளத்தில் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்ற RCB அணியின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக, அவர் சுமார் 4,275 மைல்கள் (6,880 கி.மீ) பயணித்து பெங்களூரு சென்றதை விவரித்துள்ளார்.
அந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கையில், அந்தத் திட்டம் தனக்கே அசாதாரணமாகத் தோன்றியதாக எரிக்கா மோரிஸ் ஒப்புக்கொண்டார்.
சரியாக 3 நாட்களுக்கு முன்பு நான் 4,275 மைல்கள் பயணித்து வெறும் 72 மணி நேரத்திற்குள் நான் தனியாக இந்தியா வந்தேன்.
மேலும், அந்தப் பயணத்தில் சோர்வூட்டும் விமானப் பயணங்கள், மிகக் குறைந்த உறக்கம் மற்றும் இதற்கு முன்பு ஒருபோதும் சென்றிராத ஒரு நாட்டில் வழி கண்டுபிடிப்பது போன்றவையும் அடங்கியிருந்தன.
இருந்தாலும், நான் இந்தியா சென்ற பின்னர் அங்கு கண்ட விடயங்கள் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் விஞ்சியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தான் இந்தியாவில் தங்கியிருந்த காலம் முழுவதும், முன்பின் தெரியாதவர்கள் தனக்கு உதவ மீண்டும் மீண்டும் முன்வந்ததை எரிக்கா மோரிஸ் அந்தப் பதிவில் நினைவு கூர்ந்தாள்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பது, பரிந்துரைகளை வழங்குவது, சரியான இடங்களுக்கு பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதி செய்வது என, பெரும் சுமையாக இருந்திருக்கக்கூடிய ஒரு அனுபவத்தை மக்கள் ஆச்சரியப்படும் விதமாக வசதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உணர வைத்ததாகவும் எரிக்கா மோரிஸ் கூறினாள்.
போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய உதவியதோடு, பயணத்தின்போது தன்னைக் கவனித்துக்கொண்ட இரண்டு RCB ரசிகர்களுக்கு அவர் தனது சிறப்பு நன்றியைத் தெரிவித்தார்.
அந்த ரசிகர்களில் ஒருவர் தன் மனைவியுடன் சேர்ந்து, மதிய உணவிற்காகத் அவர்களது வீட்டிற்கு அழைத்திருந்ததாகவும் எரிக்கா மோரிஸ் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முழு அனுபவத்தையும் இவ்வாறு ஆக்கியது நீங்கள்தான், அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும் எரிக்கா மோரிஸ் அந்தப் பதிவில் எழுதினார்.
பயணத்தின் முடிவில், ஒரு போட்டி நாள் அனுபவத்தை விட மிக அதிகமாகப் பெற்றதாக உணர்ந்ததாகவும் எரிக்கா மோரிஸ் குறிப்பிட்டார்.

















