சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விமர்சித்திருந்தனர்.












