ஐ.பி.எல். (IPL) தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக , இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இணையவுள்ளதாக நம்பகமான விளையாட்டு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த 19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து, தனது பயிற்சி குழுவை முழுமையாக மாற்றியமைக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
19ஆவது ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை மட்டுமே பெற்றது.
இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது.
இந்த ஏமாற்றமே அணியின் ஒட்டுமொத்தப் பயிற்சி குழுவையும் மாற்றுவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில்,19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி செயல்பட்டார்.
இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை வெல்வதற்குக் காரணமாக இருந்த ‘அதி திறமை வாய்ந்த’ முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை, அணியின் துடுப்பாட்டப் பிரிவை வலுப்படுத்த டெல்லி நிர்வாகம் அணுகியது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளின் இறுதியாக, இந்த புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு யுவராஜ் சிங் முழுச் சம்மதம் தெரிவித்துள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்பாக இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், யுவராஜ் சிங்கின் வருகை டெல்லி அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பெரும் பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

















