• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும்,  சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

blank

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை: ‘சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான,  எம்மை ஏமாற்றும் உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம்… சர்வதேச விசாரணையை கோருகின்றோம்…’ என முதன்மைப் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

‘போர் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனது?’ மற்றும் இராணுவத்தை நம்பி சரணடைந்த பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட பதாகைகளை உறவினர்கள் கண்ணீருடன் ஏந்தியிருந்தனர்.

அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், தங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு தங்களுக்கு தகுந்த நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

blank

உள்ளக நீதிப்பொறிமுறைக்கு எதிர்ப்பு: சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தின் போது காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச விசாரனை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related

Tags: international investigationjustice systemmilitarytruthwar in Sri Lanka.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

Next Post

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Related Posts

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
இலங்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்
இலங்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

2026-07-04
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

2026-07-04
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைந்தது
இலங்கை

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைந்தது

2026-07-04
கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டி!
இலங்கை

கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டி!

2026-07-04
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கை

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

2026-07-04
Next Post
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

0
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

0
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

0
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

0
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

0
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-04
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

2026-07-04
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

2026-07-04
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

2026-07-04

Recent News

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-04
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

2026-07-04
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

2026-07-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.