எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்த பரபரப்பான 16 ஆவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மெக்ஸிகோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் 54-வது நிமிடத்தில் ஜாரெல் குவான்சாவுக்கு ‘ரெட் கார்டு’ (red card) வழங்கப்பட்டதால், இரண்டாவது பாதியின் பெரும்பகுதி நேரத்தை பத்து வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்த போதிலும் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
40 ஆண்டுகளில் முதல் முறையாகக் காலிறுதிக்கு முன்னேறும் முயற்சியில், உற்சாகமான உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய போட்டியை நடத்தும் இநணை நாடான மெக்சிகோ அயராது போராடியது.
ஆட்டத்தின் தொடக்கக் கட்டங்களில் மெக்சிகோ பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்தது, ஆனால் பெல்லிங்ஹாம் அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்கள் ஆட்டத்தை இங்கிலாந்துக்குச் சாதகமாக மாற்றின.
முதலில், புகாயோ சாகாவின் அருமையான கிராஸிலிருந்து தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆட்டம் தொடங்கிய உடனேயே, பெல்லிங்ஹாம் கோல் கணக்கை 2-0 என உயர்த்தினார்.
மெக்சிகோ பந்தைக் கைப்பற்றியது, மேலும் ஹாரி கேன், ரியல் மாட்ரிட் சூப்பர்ஸ்டாரான பெல்லிங்ஹாமிற்கு பந்தை வழங்க, அவர் அதை கோலாக மாற்றினார்.
இதனால், மெக்சிகோ சிட்டி அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது.
இறுதியாக 3:2 என்ற கணக்குடன் மெக்சிகோவை தோற்கடித்த இங்கிலாந்து ஜூலை 11, சனிக்கிழமை அன்று மியாமியில் நோர்வேயுடன் காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

















