உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் மொத்தமாக இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 630பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் இதுவரை மொத்தமாக 41ஆயிரத்து 700பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 14ஆயிரத்து 277பேர் பாதிக்கப்பட்டதோடு 434பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 10ஆயிரத்து 663பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 52ஆயிரத்து 267பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.



















