• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கொரோனா விதிமுறைகளால் அத்தியாவசியப் பொருட்களை பெறமுடியாதுள்ள சீன மக்கள்!

கொரோனா விதிமுறைகளால் அத்தியாவசியப் பொருட்களை பெறமுடியாதுள்ள சீன மக்கள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/27
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா முடக்கலை கையாள்வதில் சீனாவின் கடுமையான அணுகுமுறை காரணமாக அந்நாட்டின் மில்லியன் கணக்கான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போரடி வருகின்றார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எச்.கே. போஸ்ட் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்றை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளாக, போராடிவரும் சீன அரசாங்கம் தனது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தவறி வருவதாகவும், மனித உரிமைகளை பொருட்படுத்தாது எல்லைகளில் கடுமையான விதிகளை அமுலாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி முதல் கடுமையான முடக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சியான் நகரத்தின் நிலைமைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக எச்.கே. போஸ்ட் தெரிவிக்கின்றது.

சியான் நகரத்தில் ஏறக்குறைய 13 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அந்நகரத்தில் பயங்கரமான உணவுப் பற்றாக்குறை, விநியோகம், நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுவதோடு கடுமையான நோயாளிகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஒருநாளைக்கு ஒரு வேளை மட்டுமே கஞ்சியை உணவாக எடுத்துக்கொள்வதாகவும் அதிலும் பலர் பட்டினியின் விழும்பில் இருப்பதாகவும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளன.

அந்த நகரத்தின் அதிகாரிகள் ‘உள்ளுர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும், ‘சியானில் உள்ள அன்றாடத் தேவைகளுக்கான மொத்த விநியோகம் போதுமானது’ என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர்.

குறித்த அறிக்கையின் பிரகாரம், மக்கள் தமக்கான உணவு தீர்ந்து போகும் போது தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

அத்துடன் தாம் எப்படி வாழ்கிறோம்? என்ன சாப்பிடுகிறோம்? எத்தனை நாட்களுக்கு முன்பு, பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றோம் என்ற விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டம் என்று கூறியுள்ளனர்.

அத்துடன், இணையவழியிலான கொள்வனவும், விநியோகமும் நடைபெறுவதும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என சமூக ஊடகத்தில் ஒருவர் எழுதியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் மையமாகக் கருதப்படும் சீனாவின் மற்றொரு நகரமான வுஹானும் இதேபோன்ற முடக்கல் நிலையிலேயே வைக்கப்பட்டது.

ஏறக்குறைய 11 மில்லியன் மக்கள் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு முகங்கொடுத்தனர். குறிப்பாக அவர்கள் தங்கள் வீடுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று சீனாவில் உள்ள குறித்த நகரமானது 13 மில்லியன் நபர்களை முடக்கியுள்ளது. இது வுஹானுக்குப் பிறகு சீனாவில் நடைபெற்ற மிகப்பெரிய முடக்கலாகும்.

வுஹானைப் போலவே, சியான் நகரமும் இப்போது சீனாவின் ‘பூச்சிய-கொரோனா கொள்கை இலக்கை அடைய செலவுகள்’ என்ற வகையில் விதிமுறைகள் அமுலாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஹெனானின் குஷி மாகாணத்தில், ஒரேயொரு அறிகுறி மற்றும் ஒரு அறிகுறியற்ற தொற்றாளர்கள் இருவரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்னும், கிட்டத்தட்ட  ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற முடியாதுள்ளனர். யூசோ நகரத்தில் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் பூட்டப்பட்டிருக்கும் சூச்சாங்கிலும் இதேபோன்ற தடைகள் போடப்பட்டுள்ளன.

58 கொரோனா வழக்குகள் வெளிவந்த பின்னர் அதிகாரிகள் அன்யாங் நகரத்தையும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைத்துள்ளனர், அதேநேரத்தில் தியான்ஜினில் 14 மில்லியன் மக்களின் நடமாட்டம் நகரத்திலிருந்து 21 கொரோனா வழக்குகள் பதிவாகிய பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 8 அன்று, சியான் குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு விரும்பத்தகாத விடயத்தினை எதிர்கொண்டனர்.

அங்கு செயற்பட்டு வந்த ஹேமா ஃப்ரெஷ் ஃபுட் டெலிவரி ஆப்ஸ் என்பது ‘அரசாங்கத்தின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு கோரிக்கைகளுக்கு இணங்க’ இணையவழியில் கொள்முதல் செய்வதை நிறுத்தியது.

அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமான ஹேமா சியான்ஷெங், சியானின் பல மாவட்டங்களில் உணவு விநியோகம் செய்யும் விற்பனை நிலையமாகும். இதற்கு பல கிளைகளும் உள்ளன. இவை சுகாதார விதிகளை மீறுவதாக அதிகாரிகள் கூறினர்.

இதனால் வலை எழுத்தாளர்கள் கடுமையாக சினமடைந்து எமக்கு உணவு வழங்கிய ஒரேயொரு நிறுவனமும் மூடப்படுகின்றது. இது வெட்கக் கேடானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Tags: கொரோனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வர்த்தகம் கைவிடப்பட்டது

Next Post

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

Related Posts

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு
அமொிக்கா

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-14
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை
இங்கிலாந்து

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

2026-04-14
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

2026-04-14
லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்
இங்கிலாந்து

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

2026-04-14
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்
இங்கிலாந்து

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

2026-04-13
Next Post
அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் - செந்தில் தொண்டமான்!

இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - கமல் குணரத்ன!

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

ஹட்டனில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

0
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

0
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-14
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

2026-04-14

Recent News

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

2026-04-14
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

2026-04-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.