மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உட்பட பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சாரதியின் நண்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு உணவகமொன்றிற்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மருதானை – பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 1.40 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், நபரொருவர் மீத துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.














