கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தற்போது நடிகர் அஜித் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள், கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும், கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை, திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகயளவில் தவறாகக் காட்டுகிறது என தெரிவித்துளளார்.
இதேவேளை, நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, கூட்டத்தை கூட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும் எனவும்
எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கமின்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். ஆனால், உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் அன்பை காட்ட வேறு வழிகள் உண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது எனவும் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.














