‘சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது’ என ஸி ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்யா-உக்ரைன் போர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தைவான் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தங்களின் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம் எனவும் அது இன்னும் சிறப்பாகும் எனவும் சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால் ஜப்பானின் ராணுவம் தலையிடும் என்று ஜப்பான் பிரதமர் சானே டகைச்சி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடந்துள்ளது.
ஜப்பான் அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.















