இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கோட்டே, காலி கோட்டை மற்றும் காலி போன்ற பகுதிகள், இலங்கையின் காற்று தரக் குறியீடு (SL AQI) அளவுகளை 119 முதல் 77 வரை பதிவு செய்தன.
இதற்கு முதன்மையாக PM2.5 அளவுகள் அதிகரித்ததே காரணம்.
(PM2.5 என்பது காற்றில் மிதக்கும் மிகச் சிறிய தூசுத் துகள்களை குறிக்கும்)
இன்று காலை நிலவரப்படி கோட்டேயில் மிக மோசமான அளவு 119 ஆக பதிவாகியுள்ளது.
கொலன்னாவை, தம்புள்ளை, கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலும் சற்று ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
இதனால், பாதுப்படையக்கூடிய நபர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.














