நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபவோரை கைது செய்வதற்கும் மாவட்ட ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கயின் போது கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்து 27 345 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 628 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 265 சந்தேக நபர்களும் , பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 160 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 168 நபர்களும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 51 சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன் ஏனைய போக்குவரத்து குற்றங்களுடன் தொடர்புடைய 3655 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்











