புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் சுகாதார நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் மேஜயா தலைமையிலான குழுவினர் நகரின் முக்கிய வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது உணவு பாதுகாப்பு, சுத்தம், காலாவதியான பொருட்கள் மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை சுகாதார விதிமுறைகளை மீறிய சில வணிகர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், தேவையான இடங்களில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இத்தகைய சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தெரிவித்திருந்தனர்.
















