தமிழகத்தில் மது விற்பனைக்கு எதிரான தனது நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் சி. ஜோசப் தலைமையிலான டிவிகே அரசு, தற்போது 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சண்டிகர், கேரளா, பஞ்சாப் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுடன் இணையும்.
மகாராஷ்டிராவில், கடுமையான மதுபானங்களை (விஸ்கி, ரம், ஓட்கா) அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 25 ஆகும்.
இருப்பினும் மிதமான பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானங்களை அருந்த 21 வயதிலிருந்தே அனுமதிக்கப்படுகின்றன.
கேரளாவில், மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆகும்.
பஞ்சாப், சண்டிகர் மற்றும் மேகாலயாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 25 ஆகும்.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மீது புதிய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை வந்துள்ளது.
செவ்வாயன்று, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுபானக் கடைகளை மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
இதை அரசு ஒரு பொது நல நடவடிக்கை என்று விவரித்துள்ளது.
உத்தரவின்படி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்படும் அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன.
மூடப்பட உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 717 விற்பனை நிலையங்களில், 276 வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், 186 கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 255 பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

















