தபால் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பொதி தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் அதனை பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்பட வேண்டிய விலாசத்திற்கு உரிய பெயர் உடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த பொதியை கொழும்பில் இருந்து அனுப்பி வைத்த நபர் தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
















