2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மேலும் 5 காடுகள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய மொத்த பாதுகாக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கவுள்ளன.
எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி ரிதிகல, அலியாவெடுணுவௌ காடு, புலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய காடுகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளாக ஒதுக்கப்படவுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, சுற்றாடல்துறை அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, இந்தத் திட்டம் குறித்த பரப்பளவு விபரங்களை வெளியிட்டார்.
2025ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 29 காடுகள், சுமார் 50,000 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டிருந்தன.
அதன் பின்னர், உலகக் வனங்கள் தினத்தன்று பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 50 காடுகள், 12,989 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டிருந்தன என அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

















