பகைமை நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு மேலுள்ள வான்பரப்பை, விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
புதிய மற்றும் தற்போதுள்ள எரிசக்தி கட்டமைப்புகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கமும் தேசிய மின் கட்டமைப்பும் கட்டுமானத்தின் வேகம் மற்றும் மலிவான செலவு ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
ட்ரோன் தடுப்பு வலைகள் , பலப்படுத்தப்பட்ட தங்குமிடங்கள் அல்லது மின்சார கேபிள்களை நிலத்தடிக்கு மாற்றுவது போன்ற மேம்பட்ட பாதுகாப்பு உத்திகளில் முதலீடு செய்ய அவர்கள் தவறிவிட்டனர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டன் கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில், உள்நாட்டுப் போர் போன்ற அச்சுறுத்தல்களுக்கு நாடு “தீவிரமாக தயாராக வேண்டும்” என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















