நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களில் எவ்வித உயர்வும் இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரமே, பஸ் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பஸ் கட்டணத் திருத்தம் குறித்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் விளக்குகையில்,
“எரிபொருள் விலை மாற்றங்கள் காரணமாக பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அந்த விலை மாற்றத்தின் சதவீதம் 4% க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தற்போதைய கட்டண முறையின் விதியாகும்.
எனவே, இந்த விதிமுறையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட முடிவுகள் அமையும்.” என வலியுறுத்தினார்.
இதன்படி, தற்போதைய எரிபொருள் விலை உயர்வு இந்த வரம்பைத் தாண்டாததால், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.













