அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க இராணுவம், தம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
எதிரிகள், மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அஞ்சும் நிலையை உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்றும் முகமது ரேசா நக்தி குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதற்கான ஒரு வழி, இந்தப் போரை டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து அவர்களுக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துபோகும் நிலை வந்தாலும், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு இன்னும் பாரிய ஆபத்துக்களை விளைவிக்ககூடிய பல மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ளதாகவும் அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும் என்றும் ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க இராணுவம் சந்தித்து வருகின்ற இழப்புகளாலும், உள்நாட்டில் குறைந்து வரும் செல்வாக்கு காரணமாக போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாக சர்சதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும்வரை போரை தொடர உள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளமை சர்வதேச ரீதியில் பாரிய அச்சநிலையை தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








