• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மன்னார் மனித புதைகுழி வழக்கில் ஆஜராக சட்டவாதிகளுக்கு அனுமதி!! ஊடகங்களும் செய்தியை சேகரிக்கலாம்!!

மன்னார் மனித புதைகுழி வழக்கில் ஆஜராக சட்டவாதிகளுக்கு அனுமதி!! ஊடகங்களும் செய்தியை சேகரிக்கலாம்!!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்திசேரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மன்னார் மனிதப்புதைகுழி விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலினால் வுனியா மேல்திமன்றில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டது.

குறித்த தீர்ப்பின் பின்னர் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் ஊடகங்களிற்கு  இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்,

“மன்னார் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் 2018 ஆம் ஆண்டு முதல் இம்பெற்றுவருகின்றது. அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மன்னார் நீதிமன்றமே மேற்பார்வை செய்து வந்தது.

பின்னர் அங்கிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பரிசோதனைகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது தொடர்பான அறிக்கை ஒன்றும் தற்போது வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தில் ஈடுபட்டிருந்த அரச சட்டவாதி பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் எந்த ஒரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராககூடாது என்ற வாதத்தை முன்னெடுத்திருந்தார்.

அதனை மன்னார் நீதவான் ஏற்றுக்கொண்டு. சட்டத்தரணிகள் ஆயராகமுடியாது என்ற உத்தரவை வழங்கினார். இதனை எதிர்த்து வவுனியா மேல்நீதிமன்றில் மீளாய்வு வழக்கொன்றை நாம் ஏற்படுத்தினோம். அந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்தது.

அதன் பிரகாரம் எந்த ஒரு நீதிமன்றிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராவதற்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் சாசனரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒரு உரிமை.

எனவே இது சட்டத்திற்கு மீறிய செயல் என்ற வாதத்தை நாம் முன்வைத்திருந்தோம். எனினும் குறித்த செயற்பாடுகளை அது தொந்தரவு செய்யும் என அரச சட்டவாதி வாதங்களை முன்வைத்தார்.

இதனை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி எந்த நடவடிக்கையிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு உரிமை இருக்கின்றது என்று உத்தரவிட்டு மன்னார் நீதவானின் உத்தரவினை தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் ஒரு மயில் கல்லாக இருக்கின்றது. அத்துடன் காணாமல் போனவர்களின் அலுவலகமும் இந்த வழக்கில் இடையீடு செய்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், புதைகுழி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மன்னார் நீதிவானின் மேற்பார்வையிலேயே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் சார்பிலும், அந்த அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பிலும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 நபர்கள் எந்த நேரத்திலும் அங்கு பிரசன்னமாகி அது தொடர்பான நடவடிக்கைகளை 30  மீற்றர் தொலைவில் இருந்து அவதானிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியமாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 10 நிமிடங்கள் அந்த இடத்திற்கு சென்று அந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்கும் அது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விடயம் ஏனெனில் இந்த புதைகுழி சம்மந்தமான விடயம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் அதனை பார்வையிட முடியாது என்று வலுக்கட்டாயமாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்த வைத்திய அதிகாரி உத்தரவொன்றினை வழங்கி பொதுமக்களையும் ஊடகவியலாளர்களையும் அப்புறப்படுத்தினார்.

எனவே இத்தகைய வழக்கின் மூலம் ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் இந்த தீர்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக எதாவது விண்ணப்பங்கள் செய்யவேண்டும் என்றால் அதனை மன்னார் நீதிவானுக்கு நேரடியாக சமர்பிக்கவேண்டும் என்றும் உத்தரவு வழங்கபட்டுள்ளது.

அகழ்வுப்பணிதொடர்பாக மன்னார் நீதிவானின் கட்டளையே இறுதியானதாகும். அத்துடன் நீதவானின் நேரடிகண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் சார்பான சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களம், மருத்துவ நிபுணர்கள், தொல்பொருள் திணைக்களம், ஆகியோர் இணைந்து கலந்துரையாடி எடுக்கும் முடிவு நீதவானால் அங்கிகரிக்கப்பட்டு அவரது நேரடி கண்காணிப்பில் அனைத்தும் இடம்பெறுவேண்டும் என்ற கருத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு விடயத்தை மாத்திரம் முன்வைத்தே இந்த மீளாய்வு மனுவை செய்திருந்தோம். எனினும் இந்த தீர்ப்பின் மூலமாக ஜனநாயகத்திற்கும் மக்கள் ஆட்சிக்கும் சாதகமான பலவிடயங்கள் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

எனவே இன்றையதினம் இலங்கை  ஜனநாயக சோசலிச குடியரசின் மேல்நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்வினை அளித்திருக்கின்றது. இது மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.

இதேவேளை மன்னார் நீதவானின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நாடகமாடுகின்றார்கள், இது ஒரு கற்பனைவாதிகளின் கற்பனை என்ற ரீதியில் அந்த உத்தரவு அமைந்திருந்தது.

அதனை கண்ணுற்ற மேல்நீதிமன்ற நீதிபதி எந்த ஒரு நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத ஒரு வார்த்தைகள் அல்லது மொழி என்று அதனை விமர்ச்சித்திருந்தார்.  என்பதனையும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வவுனியா மேல்நிதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த உத்தரவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மனித புதைகுழிமன்னார் மனித புதைகுழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் விலை அதிகரிப்பு – முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

Next Post

வவுனியா சிறுவர் பூங்காவில் மதுபோதையில் சிலர் அட்டகாசம்!! இருவர் காயம்!!

Related Posts

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!
இலங்கை

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆசிரியர் தெரிவு

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!
இங்கிலாந்து

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை
இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இலங்கை

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
Next Post
மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

வவுனியா சிறுவர் பூங்காவில் மதுபோதையில் சிலர் அட்டகாசம்!! இருவர் காயம்!!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

0
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

0
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24

Recent News

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.