இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்றைய சபை நடவடிக்கைகளில், மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களும்,மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்களும்,மு.ப. 11.00 – மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களும்,மு.ப. 11.30 – பி.ப. 3.00 கடை அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதியும் அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 3.00 – பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளும் அங்கீகரிக்கப்படவுள்ளன அத்துடன் பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுளள்ளது
















