சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ‘லீ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, அதன் உரிமையாளர்களில் ஒருவரான ஜேக் மொரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புத்தாண்டு இரவு, இந்த விடுதியில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது, ஷாம்பெயின் போத்தல்களில் இணைக்கப்பட்டிருந்த ‘மினுமினுப்பு வானவேடிக்கை குச்சிகள்’ (Sparklers), விடுதியின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த சத்தம் ஊடுருவாத பஞ்சு போன்ற பகுதியில் (Sound-insulating foam) பட்டதால் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன்116 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்.















