• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில்  பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/11
in இலங்கை, கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, திருகோணமலை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு, மன்னாா், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள்.

04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள்.

அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றோம்.

1.வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

3. தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

4.தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும்.

5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

6. “பயங்கரவாதத் தடைச்சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

7. கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

8. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி “கரிநாள்” போராட்டம் 04 புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம் – என்றனர்.

Related

Tags: BatticaloaJaffnakilinochisrilanka newsvvuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய இத்தி மரம் வீழ்ந்து விபத்து: முச்சக்கர வண்டிகள் சேதம்!

Next Post

தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

Related Posts

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!
இலங்கை

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்
இலங்கை

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு
இலங்கை

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்
இலங்கை

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13
Next Post
தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!

பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

0
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

0
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

0
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

2026-03-13

Recent News

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.