ஹற்றனிலிருந்து தலவாக்கலை வரை பயணிக்கும் அனைத்து பாடசாலை மாணவர்களினதும் போக்குவரத்து வசதிக்காக, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட “சிசு செரிய” (Sisu Sariya) பேருந்து சேவை இன்று (03) கொட்டகலை கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹற்றன் முதல் தலவாக்கலை வரை கட்டணச் சலுகையுடன் இந்த பேருந்து இயங்கவுள்ளது.
போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீதத்தை அரசாங்கம் ஏற்பதுடன் மாணவர்கள் மீதமுள்ள அரைவாசி கட்டணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானது.
கிஷான் பிரதர் டிராவல்ஸ் (Kishan Brother Travels) நிறுவனம் இதனை முன்னெடுக்கிறது.
இந் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமைதாங்கினர்.















