ஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு சக்திவாய்ந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ள அவர், ஈரான் இராணுவம் இன்னும் சரணடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகத்தின்படி, கடந்த 72 மணித்தியாலங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 1,332 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்களால் நகரம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காணப்படுகிறது.
ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மினாப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 மாணவிகள் உயிரிழந்துள்ளமை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போரில் இதுவரை 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் (UNICEF) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 181 பேர் ஈரானியக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ‘கொரம்ஷார்-4’ வகை ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் இஸ்ரேலில் அபாயச் சங்கு ஒலிகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க்கின் வொஷிங்டன் சதுக்கத்தில் திரண்ட போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,332 பேர் (கமேனி உட்பட மொத்த உயிரிழப்புகளாகவும் 3,000 ஈரானிய இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் .
43 ஈரானியக் கப்பல்கள் சேதமடைந்ததாகவும் 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
















