தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்து 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் அனுமதி பெற்ற மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அந்த இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.
இதன்போது இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதில் இருந்த ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












