பெங்களூருவில் நேற்றிரவு (15) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் அவர்கள் 2026 இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
இந்த நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரசிக் சலாம் (4-24), புவனேஷ்வர் குமார் (3-27) மற்றும் அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் (1-20) ஆகியோர் எட்டு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள, லக்னோ அணி 146 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
147 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாற்று வீரராகக் களமிறங்கிய விராட் கோலி, இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தைத் தவறவிட்டார்.

எனினும், அவரது 34 பந்துகளில் 49 ஓட்டங்களும் பவர் பிளேயில் அவர் வெளிப்படுத்திய அதிரடியும், கிட்டத்தட்ட ஐந்து ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பெங்களூரு அணியை 149-5 என்ற நிலைக்கு கொண்டு சேர்த்தது.
விராட் கோலி தான் எதிர்கொண்ட முதல் 14 பந்துகளில் ஆறு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்து, பெங்களூரு அணி முதல் ஆறு ஓவர்களுக்குள் 60-1 என்ற ஓட்டங்களை எட்ட ஒரு வலுவான ஓட்ட சேஸிங்கிற்கு அடித்தளம் அமைத்தார்.
11 ஆவது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு (2-23) எதிராக அரைசதத்தை நிறைவு செய்ய ஒரு துணிச்சலான ஷாட் அடிக்க முயன்றபோது, கோலி லாங்-ஆனில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் தவிர அணித் தலைவர் ரஜத் பட்டிதார் (27) மற்றும் ஜிதேஷ் சர்மா (23) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், நிகர ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்திலுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸை பெங்களூரு பின்னுக்குத் தள்ளி, நடப்பு சாம்பியன்கள் தங்களது நான்காவது வெற்றியைப் பதிவு செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஷ் ஹேசில்வுட் தெரிவானார்.













