எப்பாவள பொலிஸ் பிரிவில் உள்ள தலவ-எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர், ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல் குணரத்ன என்ற 33 வயது ஆண் ஆவார்.
எப்பாவலையின் எலியதிவுல்வெவ பகுதியில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்த அவர், அந்த வீட்டிற்கு முன்னால் தலவ – எப்பாவலை சாலையருகே உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மரக்கிளையில் கயிற்றால் தூக்கிட்டுத் உயிர் மாய்த்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை (19) கிடைத்த தகவலின் அடிப்படையில், எப்பாவலவில் உள்ள திவுல்வேவ ஏரிக்கு அருகில் ஒரு மரத்தில் இந்த உடல் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இது தற்கொலையா அல்லது வேறு சம்பவமா என்பது குறித்து எப்பாவல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













