பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர் தசூன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓராண்டு தடை விதித்துள்ளது.
ஆரம்பத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெயர் இடம்பெற்ற இலங்கையின் சகலதுறை வீரர், பின்னர் இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைந்தார்.
இதன் விளைவாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஷானக்க 2027 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கத் தகுதியை இழப்பார்.
இதே காரணத்திற்காக சிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசரபானிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

















