• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, பழைய முறையிலேயே அதன் பயன்பாடு தொடருமானால் நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவது மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகை மாதந்தோறும் பல மடங்கு அதிகரித்து வருவதை ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்:

பெப்ரவரி மாதம் 98 மில்லியன் டொலராக இருந்த செலவு, மே மாதத்தில் 522 மில்லியன் டொலராக (சுமார் 6 மடங்கு) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகச் சந்தை நிலவரப்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 720 ரூபாயாக உள்ளது. இருப்பினும், அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு 392 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

அரசாங்கத்தின் மானியத்தையும் சேர்த்து கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாயே கிடைக்கிறது.

இது பாரிய நட்டத்தை உருவாக்குவதோடு, இதனை நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் 95 சதவீதமான மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது என்றும், அந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை தற்போதைய அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சவால்களுக்கு மத்தியில் நிர்வகிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Related

Tags: anurakumara disanayakkaNuwara Eliyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

Next Post

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Related Posts

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!
இலங்கை

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்!

2026-08-11
மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!
இலங்கை

மழை வீழ்ச்சு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம்!

2026-08-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-11
2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
Next Post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் - சுப்பிரமணியம் தெரிவிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.