லண்டன் நிலத்தடி ரயில் (London Underground / Tube) சேவையில், வேலை நேரத்தைக் குறைத்து வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் புதிய நடைமுறையைத் தன்னார்வ அடிப்படையில் (Voluntary four-day week) அறிமுகப்படுத்துவது தொடர்பான சர்ச்சையை அடுத்து, சாரதிகள் மீண்டும் ஒரு புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை (Industrial action) முன்னெடுக்கவுள்ளனர்.
இந்நிலையில், ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (RMT) உறுப்பினர்கள் இந்த புதிய மாற்றங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, லண்டன் போக்குவரத்து சபை இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை கூட்டங்களை நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், தொழிற்சங்கத்தின் இந்த வேலைநிறுத்த முடிவு ஏமாற்றமளிப்பதாக லண்டன் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முதலாவது போராட்டத்தைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மதியம் 12:00 மணிக்கு இரண்டாவது 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இதன் தாக்கம் வெள்ளிக்கிழமை வரையில் நீடிக்கும் என்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும்.












