• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில் வைத்து திட்டமிட்ட முறையில் கொள்ளையிடப்படுவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் தலைமையிலான குழுவொன்று செயற்பட்டு வருவதாக மீனவர்களிடமிருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாட்டாளராகவும் இருப்பதாகப் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது மீனவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, அவர்களது வாழ்வாதாரத்தையே கடுமையாக பாதித்து வருவதாகவும் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

தமது உழைப்பின் பலனை இழந்து வரும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கடற்படை, பொலிஸார், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கிழக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் அவசரமாக முன்வைக்க வேண்டும் என்றும், கடலில் இடம்பெறும் கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

Related

Tags: Amparaifisherman issuesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

Next Post

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

Related Posts

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!
இலங்கை

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

2026-06-02
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!
இலங்கை

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

2026-06-02
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு
இலங்கை

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

2026-06-02
யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது
இலங்கை

யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

2026-06-02
2027 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட் விளையாடத் தடை!
கிரிக்கெட்

2027 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட் விளையாடத் தடை!

2026-06-02
நீர்வெறுப்பு நோய்க்காக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறதா?
இலங்கை

நீர்வெறுப்பு நோய்க்காக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறதா?

2026-06-02
Next Post
புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

0
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

0
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

0
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

0
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

0

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

2026-06-02
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

2026-06-02
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

2026-06-02
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

2026-06-02
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02

Recent News

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

2026-06-02
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

2026-06-02
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

2026-06-02
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.