வட அயர்லாந்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்கள், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஐந்து முக்கிய ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜூன் 10 ஆம் திகதி முதல் இந்த வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
இது செப்டம்பர் தொடக்கம் வரை நீடிக்கும் என்பதால், புதிய கல்வியாண்டு தொடங்கும் போது ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்ட போதிலும், சம்பளத்தையும் தாண்டி தங்களின் பணிச்சுமையே தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்வித் திணைக்களம் கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள் தங்களின் பணிச்சுமையைக் குறைக்கப் போதுமானதாக இல்லை என்று ஆசிரியர் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
எனினும், செப்டம்பர் வரை இந்த வாக்கெடுப்பு நீடிப்பதால், அதற்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.













