இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 9ஆம் திகதி மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியம் (Marvel Stadium) மைதானத்தில் நடைபெறவுள்ள ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ (Melbourne Meets Modi) நிகழ்ச்சியை விளம்பரப்படுத்திய சமூக ஊடகப் பதிவின் கீழ் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அபு முஸ்தபா’ (Abu Mustafa) என்ற பெயரில் இயங்கிய கணக்கிலிருந்து, மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிடப்பட்டதாக ஒஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்புடை கணக்கின் ஐபி (IP) முகவரியை பொலிஸார் கண்டறிந்து, குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை முன்னிட்டு மெல்போர்னில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

















