• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/13
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்தில் உள்ள  விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு அந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக   யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது“  யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related

Tags: leptospirosisஎலிக்காய்ச்சல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்கொழும்பு – கொழும்பு வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!

Next Post

இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு!

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை!

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

தவறு செய்திருந்தால் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.