விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா , பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
















