அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப நடவடிக்கையின் போது இன்று காலை அம்பாறை தலைமையக பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
பேருந்து சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தில் இவ்வாறு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
















