பிரித்தானிய இளவரசரான வில்லியமுடைய தனிப்பட்ட ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்.
ஆனால், ஹரிக்கு அத்தகைய வருமானம் கிடையாது. என்பதுடன் உண்மையாகவே ஹரி தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல அவருக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை, அந்த 23 மில்லியன் பவுண்டுகள் வருமானம், இளவரசர் வில்லியமுக்கானது அல்ல,
அது அவர் வகிக்கும் பதவிக்கானது என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் யார் மன்னரின் மூத்த மகனோ, அவருக்கு கார்ன்வால் கோமகன் என்னும் பட்டம் அல்லது பதவி வழங்கப்படும்.
அந்த பதவியை வகிக்கும் நபருக்கு (Duchy of Cornwall) டச்சி ஓப் கார்ன்வால் என்னும் சொத்து கிடைக்கும்.
இதற்கு முன் அது மன்னர் சார்லசுக்கு சொந்தமாக இருந்தது.
இந்நிலையில் அவர் மன்னரானதும்இ இளவரசர் வில்லியம் கார்ன்வால் கோமகன் ஆனார். ஆகவே அந்த சொத்தும் அவரை வந்தடைந்தது. எனவே, அந்த Duchy of Cornwall என்னும் சொத்திலிருந்து வில்லியமுக்கு வரும் வருமானம்தான் இந்த 23 மில்லியன் பவுண்டுகள்.
எனவேஇ அது ராஜகுடும்ப மரபாக பார்க்கப்படுவதுடன் ஹரிக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை .
இந்நிலையில் ஹரியின் தாயும், அவரது பாட்டியின் தாயும் அவருக்கு பெரும் தொகையை சொத்தாக வைத்துச் சென்றுள்ளதுடன் இளவரசர் வில்லியம் மன்னராகிவிடுவார்.
இதனால் ஹரிக்கு அந்த வாய்ப்பில்லை என்பதால், அவரது பாட்டியும் ஹரிக்குதான் கூடுதல் சொத்து விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!














