தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சீர்திருத்தங்களை வலியுறுத்தி அமெரிக்கா தனது நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வருவதால், வரும் ஜூலை மாதத்திற்குள் ஐநா-வின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 95 சதவீதத்தை அமெரிக்காவே வழங்க வேண்டியுள்ளது.
சாதாரண பட்ஜெட் 2.19 பில்லியன் டொலர், அமைதி காப்புப் பணிகள் 2.4 பில்லியன் டொலர், ஐநா தீர்ப்பாயங்கள் 43.6 மில்லியன் டொலர்இ சுமார் 4.6 பில்லியன் டொலர் ஆகும்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐநா-வின் சாதாரண வரவு செலவு திட்டத்துக்கு எவ்வித நிதியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா சபை தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், தேவையற்ற பிரிவுகளை நீக்கிவிட்டு அடிப்படைப் பணிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம்அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் ஐநா தூதர் மைக் வால்ட்ஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால்இ ஐநா சபை மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். இது ஒருவகையான கட்டுப்பாடான அன்பு போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 55 நாடுகள் ஏற்கனவே தங்களது 2026-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தாமதம் ஐக்கிய நாடுகள் சபையை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
நிதிப் பற்றாக்குறையால் சுமார் 2,681 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.
ஊழியர்களின் ஊதியம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக ஐநா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்ட சட்டமூலம் மூலம் ஒன்றில் ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்க 3.1 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எவ்வளவு தொகை ஐநா-விற்கு எப்போது கொடுக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை














