கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று (15) காலையில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர் .
சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் விவாகரத்து ஆகி தனிமையில் வாழ்ந்து வந்தாகவும் தெரிவிக்கின்றனர்
உயிரிழந்த நபர் 45 வருடங்களாக கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் மீன் வாடியில் தனிமையில் வாழ்ந்து வந்திருந்தாகவும்
நேற்றையதினம் மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.













