யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டங்களின் கீழ் கோப்பாய் , இருபாலை மற்றும் நீர்வேலி பகுதிகளில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்களால் கள விஜயங்கள் இடம்பெற்றன.
அதன் போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்ற போது , குடியிருப்பாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.













