தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஜான் மெகோவன், தனது நண்பரை தான் “முற்றிலுமாக நம்பியதாக” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் (Preston Crown Court) நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையான பிரெஸ்டன் டேவியின் (Preston Davey) மரணத்திற்குக் காரணமாக இருந்தமை உள்ளிட்ட , குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜானின் நண்பரான இவர், அந்தக் குழந்தையைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது சாட்சியமளித்த ஜான் மெகோவன்- சந்தேகநபரான தனது நண்பர் ஜேமி வார்லியைத் தான் மிகவும் நம்பியதாக தெரிவித்துள்ளார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்ட இந்த இரு நபர்களும் தங்களுக்கு அந்தக் குழந்தையின் மீது எந்தவிதமான ஈர்ப்பும் இருந்ததில்லை எனக் கூறி, தங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து ‘குற்றமற்றவர்கள்’ என வாதாடியுள்ளனர்.
இதேவேளை, இந்தக் கொடூரமான குழந்தை கொலை மற்றும் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பை வழங்குவதற்காக நீதிமன்ற விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.













