இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் மழை பொழிவுகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து, கார்ன்வால், டெவோன் மற்றும் பிரிஸ்டல் சேனல் (Cornwall, Devon, Bristol Channel) சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் குறைந்த அழுத்த வானிலை மண்டலம் காரணமாக இந்த மோசமான வானிலை நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் பல இடங்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடலோர பகுதிகளில் கடும் அலைச்சல் போன்ற நிலைகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், கடலோர மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், இந்த சீரற்ற வானிலை நிலைமை வார இறுதி முழுவதும் தொடரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.















