உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியான பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
நேற்று இரவு (01) நடந்த இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் வீடுகள், ஒரு ஆம்புலன்ஸ் நிலையம் மற்றும் ஒரு தங்கும் விடுதி உள்ளிட்ட பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டு தீக்கிரையாகியுள்ளன.














