யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்பகட்ட பணியின் போது மைதான பகுதியில் இருந்து பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஊர் காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதற்கிணங்க விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ரவைகளை மீட்டெடுப்பதற்கான உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை (22) ரவைகள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.















